என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வேந்தர் கோப்பை கிரிக்கெட்
நீங்கள் தேடியது "வேந்தர் கோப்பை கிரிக்கெட்"
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடக்கி வைத்தார். #ChancellorsCupCricket #BanwarilalPurohit
சென்னை:
தமிழகத்தில் முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்படும் இப்போட்டித் தொடர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
துவக்க விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இப்போட்டித் தொடரில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி பொங்கலுக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. #ChancellorsCupCricket #BanwarilalPurohit
தமிழகத்தில் முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்படும் இப்போட்டித் தொடர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
துவக்க விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இப்போட்டித் தொடரில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி பொங்கலுக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. #ChancellorsCupCricket #BanwarilalPurohit
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X